திருக்குறளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
* திருக்குறள் முதன் முதலில்
அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள
குறட்பாக்கள்- 380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள்
மட்டும் இடம்பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட
இரு எழுத்துகள் – ளீ, ங
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்
* திருக்குறளில் “கோடி“ என்ற சொல்
ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
* “எழுபது கோடி“ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது
* “ஏழு“ என்ற சொல்
எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறள் ஆங்கிலத்தில் 40 பேரால் மொழிபெயர்க்கப்பட்ட்து.
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி “ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.